சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 என்ற அளவில் இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் வருவதற்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வரும் நாட்களில் மிக அவசியம்.